Header image alt text

20161202_095647யாழ். வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தின விழாவும் பாடசாலையில் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ அருணாசல சாஸ்திரிகள் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திரு. ந.இரவீந்திரன் அவர்களது தலைமையில் நேற்று (02.12.2016) வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. சந்திரராசா (வலயக் கல்விப்பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. சா.அருள்ஞானானந்தன் (கிராமசேவை அலுவலர், வடலியடைப்பு) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

image20மாங்குளம்-மால்லாவி வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பில் வசிக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைதத்துவக் குடும்பங்களிற்கு முழுமையாகக் தமது வாழ்வாதார மேம்பாடு சிறப்பதற்காக நல்லின ஆடுகளும், வீட்டிற்கொரு மரவளர்ப்பு திட்டமும், அதுசார்ந்த தொழில் நுட்ப கருவிகளும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களின் முயற்சியாலும், செயல்பாடாலும் கடந்த 30.11.2016 அன்று வழங்கிவைப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் மாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமகாணசபை பிரதிஅவைதலைவர், கால்நடை அபிவிருத்தி திணைக்கள மாகாண பிரதி பணிப்பாளர், நீர்பாசன பிரதி மாகாண பணிப்பாளர், கால்நடை வைத்தியர்கள், துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து சிறப்பித்து பயனாளிகட்கு வழிகாட்டலை மேற்கொண்டிருந்தனர்.
Read more

img_8681எதிர்வரும் 18.12.2016 (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், இளைஞர் விவகார அமைச்சினாலும் இலங்கை இளைஞர்களின் குரலை அங்கீகரிக்கப்பட்ட மேடை ஒன்றினூடாக

தேசிய மட்டத்திற்கு உயர்த்தும் நோக்குடன் நடைபெறவுள்ள நான்காவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்மனுக்கள் நேற்றுக்காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்தில் வவுனியா மாவட்ட வேட்பாளரான ஊவா வெல்லச பல்கலைக்கழக, முகாமைத்துவ பீட மாணவன் ஸ்ரீகரன் கேசவன் காலை 09.30 மணியளவில் தனது வேட்புமனுவை தனது மாவட்ட ஆதரவாளர்களுடன் வவுனியா பிரதேச செயலகத்தில் கையளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

img_87671984ஆம் ஆண்டு மார்கழி 02ஆம் திகதி அதிகாலை 5மணியளவில் வவுனியா சேமமடு முதலாம் படிவத்தில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்ட 22 பொதுமக்களும் காணாமல் போனதன் 32ஆம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு

நேற்று (02.12.2016) வெள்ளிக்கிழமை சேமமடு முதலாம்படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் சேமமடு உறவுகளினால் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இவ் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more

dsc_1529புதிய அரசியல் யாப்பில் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளும் அபிலாஷைகளும் எந்தக் காலத்திலும் பாதிக்கப்படாத, எஞ்ஞான்றும் நீக்கப்பட முடியாத வகையில் எந்தவகையிலும் எதிர்காலத்தில் மாற்றமுடியாத சரத்தாக (Entrenched clause) சோல்பரி அரசியலமைப்பில் சரத்து 29ஊ க்கு ஒப்பான ஈடான, வலுவான சரத்து அமைய வேண்டும்.

மேலும் மொழிச்சமத்துவமும் மொழிப்பயன்பாடும் மொழி உரிமையை வலியுறுத்தும் வகையில் சரத்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய பணிக்குழு வலியுறுத்துகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாதுரை விநாயகமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Read more