afkhanஆப்கானிஸ்தானில் இருந்து வருகைதந்த குழுவினருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் 10 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், சென்ரபோ கியூமன் கேரியன் பியார்ஸ் என்ற நிறுவனம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களின் பிரநிதி களாக இன்று வருகை தந்திருந்தனர். அவர்கள் மிக முக்கியமாக எமது மாவட்டத்தில் நடைபெறும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் மக்களின் பங்களிப்பு தொடர்பாகவும் இங்கிருக்கும் சுகாதாரம் கல்வி போன்ற வசதிகளை அறிவதற்காகவும் வருகை தந்திருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இங்கு நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அறிவதற்கா கவும் வருகை தந்திருந்தனர். சீ எச்.ஏ என்ற நிறுவனம் இச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. அவர்கள் இங்கு வந்து எங்களுடைய அனுபவங்களையும் கேட்டறிந்து கொண்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.