sddsdsdsகாலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த, கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

இதன் நிர்மாணப் பணிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக நிஷாந்த முத்துஹெட்டிகம சுட்டிக்காட்டியுள்ளார்.

மதங்களுக்கிடையே ஒற்றுமைய ஏற்படுத்தல் மற்றும் சமாதானத்தை நிலை நாட்டுதல். கின்னஸ் சாதனை படைத்து இந்நாட்டின் புகழை ஓங்கச் செய்தல் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சமூக சேவை ஆகிய ஐந்து காரணங்களைக் கொண்டே மேற்படி கிருஸ்மஸ்மரம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.