harbourகொழும்பு துறைமுகத்தில் இன்றுஅதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த தோடு மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துறைமுகத்தின் ஊழியர் ஓய்வறைப் பகுதியிலேயே இன்று அதிகாலை தீ பரவியிருந்ததாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 38 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீயணைப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ள துறைமுகப் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.