klinochi01மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
 
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதைக் கண்டித்தும், யுத்த மோதல்களின்போதும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more