கடும் புயலான வர்தாவின் தாக்கத்தால், சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வர்தா புயலின் சீற்றத்தால் வேரோடு மரங்கள் வீழ்ந்தன.
இன்று திங்கள்கிழமை மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்த அதி தீவிர புயலான ‘வர்தா’, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது.
இன்று காலை முதலே, சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். Read more