Header image alt text

maithri-malaysia-primeஇலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். அத்துடன் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்தும் ஜனாதிபதி மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமுக அபிவிருத்தி குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோதே குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dsc05565முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் வலயக்கல்வி வாரிய அங்குரார்ப்பண நிகழ்வு மாங்குளத்தில் அமைந்துள்ள துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் மற்றும் அரியரத்தினம் ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர், வாரியக்குழு அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.   Read more

eஎமது ஈழ உறவான தெல்லிப்பளையைச் சேர்ந்த நர்மதன் அவர்களால் தனது தாயார் அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவு(16.12.2016) தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பெரியபரந்தனை முகவரியாகக் கொண்ட சுரேஸ்குமார் விசாலினி என்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சுரேஸ்குமார் என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக இவ் துவிச்சக்கரவண்டி அவரது மகளான சுரேஸ்குமார் விசாலினிக்கு அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவாக வழங்கபட்டுள்ளது. சுரேஸ்குமார் கடந்தகால யத்தத்தின்போது தனது கால் ஒன்றை இழந்துள்ளார். மேற்படி கைங்கரியத்தை செய்ய முன்வந்த நர்மதன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் சுரேஸ்குமார் அவர்களின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அமரர் அருந்தவராசா கௌரிதேவியின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)