eஎமது ஈழ உறவான தெல்லிப்பளையைச் சேர்ந்த நர்மதன் அவர்களால் தனது தாயார் அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவு(16.12.2016) தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பெரியபரந்தனை முகவரியாகக் கொண்ட சுரேஸ்குமார் விசாலினி என்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சுரேஸ்குமார் என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக இவ் துவிச்சக்கரவண்டி அவரது மகளான சுரேஸ்குமார் விசாலினிக்கு அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவாக வழங்கபட்டுள்ளது. சுரேஸ்குமார் கடந்தகால யத்தத்தின்போது தனது கால் ஒன்றை இழந்துள்ளார். மேற்படி கைங்கரியத்தை செய்ய முன்வந்த நர்மதன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் சுரேஸ்குமார் அவர்களின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அமரர் அருந்தவராசா கௌரிதேவியின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)