sfdfவடமாகாணத்தில் அண்மையில் நடந்த குழப்பகரமான சம்பவங்கள் எதிலும் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் மூன்று பேரை சமூகத்துடன் இணைத்தல் மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்றவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட கைத்தொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜானக ரத்நாயக்க இதனை கூறியுள்ளார். புனர்வாழ்வு பயிற்சிகள் வெற்றிகரமான முறையில் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் மீண்டும் எந்த வகையிலும் மோதல்களுடன் சம்பந்தப்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த இரண்டு வருடங்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.