p1400473சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த 03.12.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினரான வட மாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக சட்டத்தரணி செல்வி ஞானலோஜினி சிவஞானம் மற்றும் சமூக சேவகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வின்போது ஆசியுரையினை யாழ் சின்மயா மிசன் ஆச்சாரியார் யாக்ரத சைத்தன்ய சுவாமிகள் அவர்கள் வழங்கினார். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத் திறனாளிகள் 325பேரும் அவர்களுடைய குடும்பத்தினருமாக 450ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

p1400470 p1400491 p1400504 p1400505 p1400521 p1400562