யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது சமய ஆச்சாரப்படி நிகழ்வுகள் ஆரம்பமாகி பதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். மேற்படி நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Read more