maheshini-colonneவெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஷேடமாக ரஷ்யத் தூதுவர் கொலை செய்யப்பட்ட பின்னர் இது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷனி கொலென்னே சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் அவருக்கு விஷேட பாதுகாப்பு பெற்றுக் கொடுக்குமாறு அந்த நாட்டுக்கு தெரியப்படுத்தியதற்கமைய தற்போது அது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.