jaliya-wickramasuriyaஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜாலிய விக்கிரமசூரிய கடந்த நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது நிதி குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இலங்கை தூதரகத்துக்காக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட பணத்தில் 66 இலட்சம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.