dffdதொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு (டேசன் தோட்டம்) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதமாகியுள்ளது. 

இன்று காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, வீடொன்றில் இருந்து பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் மின்சார கசிவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும், அப் பகுதி மக்களின் உதவியால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட சில வீடுகளில் இருந்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. எனினும், பெருமளவிலான பொருட்களும் வீட்டு தொகுதியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன், ஸ்தலத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்னிணைப்புக்களை துண்டித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 28 பேரை தோட்டத்தின் சனசமுக நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.