armsவவுனியா, சின்னதம்பனை நீலியாமோட்டைப் பிரதேசத்தில் யுத்த காலத்தில் புலிகளினால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் மிதிவெடிகள் உள்ளிட்ட யுத்த ஆயுதங்கள், விமானப் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பொலிஸ், விசேட செயலணிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மிதிவெடிகள்-49, 60 மில்லிமீட்டர் மோட்டர் குண்டுகள் -82 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.