swordயாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வீச்சில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றுமாலை இடம்பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த இளைஞரான வின்சன், ஆட்டோ சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றிருந்த வேளை அங்கு வாள், கத்தி மற்றும் கொட்டன்களுடன் வந்த ஆயுததாரிகளே சரமாரியான வாள் வீச்சை அங்கு நின்றிருந்தவர்கள் மீது நடத்தியிருந்தனர். இதில் முதலில் பிரனீத், வின்சன் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி இரத்தம் சிந்தியபடி கிடந்துள்ள நிலையில், அவர்களைக் காப்பாற்ற முற்பட்ட ஆட்டோச்சாரதி சாய்மாறன் மீதும் வாள்வெட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அங்கு நின்று அடாவடியில் ஈடுபட்ட ஆயுததாரிகள் அதன் பின்னர் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் குற்றவாளிகளை கைதுசெய்யும் முயற்சியினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.