drawnயாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கீரிமலை – மாதகல் – 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் நீரில் மூழ்கி பலியானார்.

யாழ். இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது – 31) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார். இதேவேளை யாழ். கந்தரோடைப் பகுதியில் உள்ள பினாக்காய் குளத்தில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, அலுக்கை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சாருஜன் (வயது9) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.