Header image alt text

1fசிவசுயந்தனின் இசையில் ஐயப்பன் புகழ்பரப்பும் சபரிசகானம் ஐயப்பன் பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா 26.12.2016 திங்கட்கிழமை பிற்பகல் 4மணியளவில் சிறுவிளான் சிறீ மெய்கண்டன் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சி.றமணராஜா (விரிவுரையாளர், இந்து நாகரீகத்துறை, யாழ். பல்கலைக்கழகம்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

sensolai-02வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கனடா கிளையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்களுக்கு அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தில் தாய் தந்தையை இழந்த தந்யை இழந்த மற்றும் தாயை இழந்த என 40 ஆண்களும் 150 பெண்களுமாக 190 சிறார்கள் பராமரிக்கபட்டு வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்ல நிர்வாகத்தினால் கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. Read more

sdddddfமுல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது. இன்றுகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த சூரிப்பிள்ளை கந்தப்பிள்ளை (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து விபத்தினை ஏற்படுத்திய இராணுவ அம்புலன்ஸ் வண்டியை உடனடியாக இராணுவத்தினரால் அகற்றப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். Read more

barathi-1எமது புலம்பெயர் உறவான டுபாய் நாட்டைச் சேர்ந்த திருமதி. சுமதி குணராஜசிங்கம் அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக பாரதி இல்லத்திற்கு ரூபா 100,000 பெறுமதியான உணவு பொருட்களான அரிசி 900முப 95முப சீனி 50 பால்மா பைக்கற் என்பனவற்றை இல்ல களஞ்சியத்திற்க்கு இன்று அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார். Read more

vigneswaranவடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு காலப்பகுதி வரையில் வடக்கில் காணிகளைப் பெற்ற 4 ஆயிரத்து 307 குடும்பங்களில், 73 சதவீதமானவர்கள் முஸ்லிம்களாவர். அதேநேரம், 2015ம் ஆண்டு வரையில் 26 ஆயிரத்து 668 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்கான விண்ணப்பித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் இதுவரையில் 24 ஆயிரத்து 40 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 2 ஆயிரத்து 801 குடும்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன. அதேநேரம் தெற்கிலும், புத்தளத்திலும் குடியேறியுள்ள பல முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேற விண்ணப்பிக்கவில்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.