sasikalaஅண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதற்கு கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வி.கே.சசிகலாவிடம் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து இணக்கம் தெரிவித்தனர். சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசுவத்துடன் பணியாற்ற பொதுக்குழு உறுதியளிப்பதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானத்தை கண்ணீர் மல்க ஏற்றுக் கொண்ட சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளாரென ஓ.பன்னீர் செல்வம் ஊடகத்தினரிடம தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் திகதி காலமானதை அடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றாமை இங்கு குறிப்பிடத்தக்கது.