jailபேஸ்புக் வலைத்தலத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த பதிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தப் பதிவு பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது கட்டாரில் இருந்து எனவும், மேலும் சில நாடுகளில் இருந்தும் சில நபர்கள் சம்பந்தப்பட்ட பதிவினை பேஸ்புக்கில் இணைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.