battiமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சட்டவிரோத மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இன்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஆண்டில் குறித்த மதுபான சாலைகளின் அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாடசாலைகள் ஆலயங்கள் பொதுச்சந்தை இவைகளுக்கு அருகில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைகளால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதுடன் வீதி விபத்துக்களும் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.