Header image alt text

15826606_723657801141523_5825987583049105067_nஇலங்கையின் முன்னைநாள் பிரதமர் அமரர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகள் நேற்று 31.12.2016 சனிக்கிழமை ஹொரணையில் இடம்பெற்றது. இறுதி சடங்கில் மதத் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னைநாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, எதிர்கட்சி தலைவர் இராசவோதயம் சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்ருருந்தனர்.

இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு மறைந்த முன்னைநாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் புதல்வர் விதுர விக்கிரமநாயக்கவிடம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார். அரமரர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் அவரது ஹொரணை இல்லத்தில் இருந்து ஹொரண பொது விளையாட்டரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு, அங்கு சமய சடங்ககள் இடம்பெற்று அரச மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Read more

kalvi0பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், நியூ லைன் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும், திருகோணமலை மூதூர் கலைமகள் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான திரு சதீஸ்குமார் தலைமையில்  இன்றையதினம்(31/12/2016) மாலை 4.00 மணிக்கு கழகத்தின் மைதானத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு   வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read more

addan01அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில் டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம், வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் இன்று (01) அதிகாலை அடையாளம் தெரியாதவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா வனராஜா ஆலயத்தில் திருடும் போது அந்தக் காட்சி கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கமராவில் மிகத்தெளிவாக பதிவாகியுள்ளன. Read more

thurukiஇரவு விடுதி ஒன்றில் புத்தாண்டை கொண்டாடிய மக்கள் மீது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த தீவிராவதிகள் சரமாரியாக சுட்டத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more