thurukiஇரவு விடுதி ஒன்றில் புத்தாண்டை கொண்டாடிய மக்கள் மீது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த தீவிராவதிகள் சரமாரியாக சுட்டத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை பார்த்தவர்கள் பதறியபடி ஓடினர். மேலும் சிலர் அருகில் இருந்த கடலுக்குள் குதித்து தப்பியுள்ளனர். இந்நிலையில் தாக்குதலில் தீவிரவாதிகளில் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்ததாக அங்கு இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்ட மற்றொருவர் இருட்டில் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியில் 2016ம் ஆண்டு மட்டும் 6 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது. மேலும் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.