addan01அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில் டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம், வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் இன்று (01) அதிகாலை அடையாளம் தெரியாதவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா வனராஜா ஆலயத்தில் திருடும் போது அந்தக் காட்சி கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கமராவில் மிகத்தெளிவாக பதிவாகியுள்ளன.இந்தத் திருட்டுச் சம்பவத்தில் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தங்கத் தாலியுடன் கூடிய கொடி சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் பிள்ளையாருக்கு சாத்தப்பட்டிருந்த வெள்ளி ஆபரணமும் திருடப்பட்டுள்ளதாகவும், மருதவீரன் ஆலயத்தில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் இவரை பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடும் போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டே திருடுவதால் இந்த திருட்டுச் சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நபர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 0714439643, 0767130000

சம்பவம் தொடா்பில் பொலிஸ் மோப்பநாய்களை கொண்டு திருடா்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வனராஐh கோவிலில் மாத்திரம் சுமார் இரண்டரை இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையா்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.