sfdfகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுபகல் 12.30மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.யுத்த நிறைவடைந்த பின்னர் உடைக்கப் பட்டிருந்த கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கல்லறை அமைக்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில், அங்கு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று, முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அப்பணிகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.