v-k-sasikala

கச்சத்தீவை முன் யோசனையின்றி இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்ததன் காரணமாகவே இந்திய மீனவர்கள் இழப்புக்களுக்கு ஆளாகி வருவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீ.கே. சசிகலா அறிக்கையொன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும் வேதனையளிப்பதாக வீ.கே. சசிகலா தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 51 மீனவர்களும் படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால், அவர்களின் குடும்பங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.