8-3பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் திரு ரஜீவ் தலைமையில் இன்று (07.01.2016) மாலை 5.30மணிக்கு தோணிக்கல் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்சன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், 32 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், நடுச் செட்டிகுளம் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி திரு எல்.சுரேந்திரசேகரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் திரு மகேந்திரன்(ராஜா) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்சன், மற்றும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், கலாசார பிரிவிற்கான தலைவர் திரு தே.பிரகாஷ்கர், உறுப்பினர்களான திரு வ.பிரதீபன், திரு ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

3 4 5 6 7-1 8-3 8-4 9-2 10-3 14