sword-cut-suspectsயாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியிருந்தனர்.

இதனையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்களை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பொலிஸ் விசாரணையின் பின் நேற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு நீதிவானின் உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.