jailஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று, இரண்டாண்டுகள் பூர்த்தியாவதையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், நாடளாவிய ரீதியில் 285 கைதிகள், இன்றுகாலை, விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். இதேவேளை, திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் தலைமையில் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஜே.ஏ.ஆர்.பி.சஞ்ஞீவ, புனர்வாழ்வு அதிகாரிகள் உட்பட சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலர் இதன்போது கலந்துகொண்டார்கள். இதேவேளை யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.