mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உத்தயோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளையதினம் பிரித்தானியாவுக்கு பயணம் செய்கின்றார். இந்தப் பயணத்தின் போது அவர், வரும் 11ஆம் திகதி மாலை 6மணியளவில் லண்டனில் உள்ள சதாம் இல்லத்தில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ளார்.

ஒருவாரகால பயணமாக செல்லும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் தங்கியிருக்கும் போது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சனைச் சந்திக்கவுள்ளார். அத்துடன் சில தனிப்பட்ட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தெரசா மே அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், லண்டனுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளும் இலங்கையின் முதலாவது உயர்மட்டப் பிரமுகர் மங்கள சமரவீரவே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.