china-ambasadorஇலங்கையின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் நேற்று தெற்கு பொருளாதார அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்காக, சீனாவின் அபிவிருத்தி உதவிகளை எந்த எதிர்மறை சக்திகளாலும் தடுக்க முடியாது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை எவராலும் தடுத்து விடவும் முடியாது. இது இலங்கைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. தெற்கு அபிவிருத்தித் திட்டத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு 50க்கும் அதிகமான சீன முதலீட்டாளர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர். Read more