swordயாழ். கல்வியங்காடு பகுதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர், வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிசென்ற சம்பவம், நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள புலவனார் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர், நேற்று இரவு அவ்வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் அடங்கிய குழு, இளைஞரை வழி மறித்துத் தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர், விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை, தாக்குதலாளிகள் குறித்த இளைஞனைத் துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.