mangalaபிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார்.

லண்டனிலுள்ள பொதுநலவாய அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளருக்கு விளக்கிக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.