Header image alt text

fddfமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் வைத்து மூன்று தமிழ் பண்ணையாளர்களை பிக்குமார் தாக்கிய சம்பவ இடத்திற்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சென்றிருந்தார்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான பண்ணையாளர்கள் உட்பட குறித்த பகுதியிலுள்ள பண்ணையாளர்களை சந்தித்ததுடன், சம்பவத்தையும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்து மயிலத்தமடு, மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை துப்பாக்கியால் சுடுவது, கால்நடைகளை கடத்துவது, பெரும்பான்மை இனத்தவரினால் தமிழ் பண்ணையாளர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுடிருக்கின்றது. Read more

housing schemeவவுனியா மாவட்டத்தில் 10ஆயிரம் பொருத்துவீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநி யோகிக்கப்பட்டு வருகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ணப்பப் படிவங்களின் விநியோகம் அரசஅதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது.

கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. Read more

Mrs nagaranjani Ainkaranதைப்புத்தாண்டின் தமிழ் மக்களது வாழ்வு என்றும் உறுதியாக மலர்ந்திட வேண்டும் என்பதில் நம்பிக்கையாகவும் கடந்துவிட்ட எமது பாதைகளை கனவுகளோடும் களம் பல தந்த எம் உறவுகளின் தியாகம் வென்றிடவும் நாம் நம்பி வாக்களித்த வாழ்வு மெய்ப்பட்டிடவும்

என்றும் ஐந்து தசாப்பதங்களுக்கும் மேலாக சிந்திய உதிரங்கள் அரசியல் தீர்வு கிடைத்திட இவ் நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்பதோடு, நாம் தமிழர் என்ற உறவோடு ஒயாது எம் பாதங்கள் இலச்சியம் நோக்கி நகர இந் நாளில் ஒன்றிணைந்து சபதம் எடுத்திடுவோம். Read more

wedrerவேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய நிம்புஜோர்ஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இராணுவ வாகனம் அதிக வேகமாக சென்ற காரணத்தினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

autoவவுனியா சாஸ்திரிகூழாங்குளம் வீதியில் இன்றுகாலை 8 மணியளவில் இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்குளத்திலிருந்து வவுனியா சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்புறமாக வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spபுதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான மக்களின் ஆணை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமே அன்றி 2020ஆம் ஆண்டு வரை புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் நிராகரித்தால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று ஏற்பாடு என்னவாக இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். Read more

champika ranawakaநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கை குப்பைக் கூடைக்குள் வீசப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள், தேசிய நலனுக்கும், இன நல்லிணக்கத்துக்கும் விரோதமானவை. செயலணியின் பரிந்துரைகளின் மூலம், போர்க்குற்றங்களுக்காக எமது போர் வீரர்களையும், அரசியல் தலைவர்களையும், விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுப்ப ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முயற்சிக்கக் கூடும். Read more

autraliaஇலங்கையின் சுற்றுலாத்துறையின் ஆற்றல் அபிவிருத்திக்கு உதவுவதற்கு அவுஸ்ரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது. ஆற்றல் அபிவிருத்தி மூலம் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று கொழும்பில் இடம்பெற்ற இது தொடர்பான செயற்திட்ட நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ஸன் தெரிவித்துள்ளார்.

பயிற்சிகளை வழங்குவோருக்கும், தொழில்களில் ஈடுபடுவோருக்கும் இதன் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்காக அவுஸ்ரேலியா நான்கு வருடங்களுக்கு 1.6 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

raviஇலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு முதல் ஐந்தாண்டு வரையான வதிவிட விசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.

300,000 அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கே இவ்வகையான வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.