autraliaஇலங்கையின் சுற்றுலாத்துறையின் ஆற்றல் அபிவிருத்திக்கு உதவுவதற்கு அவுஸ்ரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது. ஆற்றல் அபிவிருத்தி மூலம் பல்வேறு சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று கொழும்பில் இடம்பெற்ற இது தொடர்பான செயற்திட்ட நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ஸன் தெரிவித்துள்ளார்.

பயிற்சிகளை வழங்குவோருக்கும், தொழில்களில் ஈடுபடுவோருக்கும் இதன் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்காக அவுஸ்ரேலியா நான்கு வருடங்களுக்கு 1.6 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.