lankan in canadaபுலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து இலங்கைத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார். மாணிக்கவாசகம் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார்.

குறித்த நபர் புலிகளுக்காக நிதி சேகரித்தார் எனவும் தன்னார்வமாகவே புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்தார் என்றும் கனடாவின் குடிவரவு சபை ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியிருந்தது. இவ்வாறான குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட்டு இவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வந்தார். எனினும் அவரை நாடு கடத்துமாறு கனடாவின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.