சம்பளம் குறித்த கோரிக்கையினை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளன. இதன்கீழ் ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.