Header image alt text

ranil swiss preஇலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஏற்படுத்தப்பட்ட சாதகமான படிமுறைகளை சுவிட்ஸர்லாந்து வரவேற்றுள்ளது. ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி பூபிஸ் லொய்ட்காட் தெரிவித்துள்ளார்.

டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். இதுவரை இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின், முதலீட்டு மாநாடு விரைவில் சுவிட்ஸர்லாந்தில் நடத்தப்படும் எனவும் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

mangala swedenசுவீடனுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஸ்ரொக்ஹோமில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயல்முறைகள், இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய விவகாரங்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேசியதாக, சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். Read more

ranil eric soulheimபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் எரிக் சொல்ஹேம் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிஸர்லாந்து சென்றுள்ள பிரதமர், உலக பொருளாதார மாநாட்டு மத்திய நிலையத்தில் வைத்து சொல்ஹேமை சந்தித்துள்ளார். இலங்கையில் பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை நிதி சூழலை உறுவாக்குவது தொடர்பில் நிபுணர்களின் அறிவுரையை பெற்றுக் கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ranil pakistanஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு விரைவாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அணுக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் டாவோஸ் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவினை வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நவாஸ் செரிப் இதன்போது பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். Read more

helicopterகுற்றச்செயல்களை தடுக்க பொலிஸாருக்கு ஹெலிகொப்டர் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த ஹெலிகொப்டர் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஹெலிகொப்டர் ஒன்றை பயன்படுத்தினால் இலகுவில் கொள்ளையர்களை பொலிஸாரினால் கைது செய்ய முடியும் என பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். வாகன நெரிசல்களை கண்காணிப்பதற்கும் ஹெலிகொப்டரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய பொலிஸாரின் பயன்பாட்டுக்காக அரசாங்கம் ஹெலிகொப்டர் ஒன்றை வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனவும், மனுதாரர்களை எவரும் பிரதிநிதித்துவம் செய்து நீதிமன்றில் முன்னிலையாக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடராஜா ரவிராஜின் மனைவியினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜுரிகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ரவிராஜின் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். Read more

chandrikaநல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் பாடசாலைகளின் பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது தலைமையில் இயங்கும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க அலுவலகம், கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பாடசாலை பாடவிதானத்தில் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியம் என்பவற்றை உள்ளடக்க கல்வித் திணைக்க ளம் உறுதியளித்துள்ளதாகவும் சந்திரிக்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

sfdfdதம்முடன் கலந்தாலோசிக்காமல் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான வர்த்தமானியை அச்சடிக்க வேண்டாம் என சிறுபான்மைக் கட்சிகள் கோரியுள்ளன.

எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் உள்ள விடயங்கள், சிறுபான்மை இனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, தம்முடன் கலந்துரையாட வேண்டும் என்றும் சிறுபான்மைக் கட்சிகள் கோரியுள்ளன. Read more

ezhuvai theevuயாழ். எழுவைதீவு இறங்குதுறைக்கான சுமார் மூன்று கிலோமீற்றர் வீதி நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. வடக்கிற்கான விசேட கருத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாது காணப்பட்டிருந்தது. பிரதேச செயலகம் எடுத்த முயற்சியின் பலனாக சுமார் 26 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

trinco harbourஇந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு விரைவில் பூர்த்தி செய்யப்படும் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற “ரைசினா கலந்துரையாடல் 2017” மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க முடியும் என்று நாம் நம்புகிறோம். இதுதொடர்பாக இந்தியா- இலங்கை இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தெற்காசியாவின் ஆழமான துறைமுகமான திருகோணமலையை, இந்தியா அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு விரைவில் பூர்த்தி செய்யப்படும். Read more