yarl deviயாழ். மல்லாகம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில்மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த நபர் குறித்த ரயிலின் ஓட்டுநரான டி.எம்.தர்மசேன (வயது 47) எனத் தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மீதே இவ்வாறு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.