ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனவும், மனுதாரர்களை எவரும் பிரதிநிதித்துவம் செய்து நீதிமன்றில் முன்னிலையாக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடராஜா ரவிராஜின் மனைவியினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜுரிகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ரவிராஜின் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். ஜூரிகளை நியமிக்க எடுத்த தீர்மானத்திற்கு சவால் விடுக்கும் வகையிலும், தீர்ப்பினை திருத்தி அமைக்கப்பட வேண்டும் எனக் கோரியும் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.