indian navy navஇந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்றையதினம் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து இலங்கை கடற்படை இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளைக் கொள்வனவு செய்துள்ளது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் இந்தக் கப்பல்கள் விரைவில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.