newzealandசுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்து நியூசிலாந்தும் இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டொட் மெக்லேவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டின் இடையே நடத்தப்பட்ட சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் வர்த்தக விடயங்களில் சில பொருத்தப்பாடுகள் காணப்படுவதாகவும் இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதனால் இரு நாடுகளுக்கும் நன்மை ஏற்படும் எனவும் நியூசிலாந்து அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.