Header image alt text

trumpஅமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற நிலையில் வெள்ளை மாளிகையில் கோலாகலமாக விழா நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 8ம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள பிளேர் ஹவுஸில் தங்கினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி நேற்றுக்காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர். பின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளை மாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிக்செல் ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளித்தனர்.
Read more

lanka vietnamஇலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வர்த்தக, சமூக பொருளாதார உறவுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வியட்நாம் பிரதமர் ஹ_யன் ஸ்சுவானுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு வார்த்தையின்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்பாகவே சில முக்கிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்ப்பதாக வியட்நாம் பிரதமர் தெரிவித்தார். Read more

fonsekaஅமைச்சர் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்வின் கொலை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்று சுமார் 5 மணித்தியாலங்கள் வரை குற்றப் புலனாய்வுப் பிரவினர் சரத் பொன்சேகாவிடம் இவ்வாறு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

maithripalaஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்றுப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்புக்கு தனது டுவிட்டர் வலைதளத்தினூடாக ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

jallikattuசல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டமொன்று இன்று முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவானவர்கள் இணைந்துகொண்டிருந்தனர். இதேவேளை, இன்று பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற ஏற்பாடாகி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

former colonel susanthaதிருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லையென பாதுகாப்புத் துறை விசேட நிபுணரான ஓய்வு பெற்ற கேணல் சுசந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து அவர் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் வரலாற்று நெடுகிலும் ஒரு அவதானம் இருந்து வருகின்றது. இவ்வாறு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

trinco harbourதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இலங்கை-இந்தியா இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியா வசம் ஒப்படைக்க இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டெல்லி சென்றுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா வசம் ஒப்படைத்திருக்கும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடன் சமமான உறவு நிலையைக் கடைப்பிடிக்க எண்ணியே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். Read more