அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற நிலையில் வெள்ளை மாளிகையில் கோலாகலமாக விழா நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 8ம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள பிளேர் ஹவுஸில் தங்கினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி நேற்றுக்காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர். பின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளை மாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிக்செல் ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளித்தனர்.
Read more