former colonel susanthaதிருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லையென பாதுகாப்புத் துறை விசேட நிபுணரான ஓய்வு பெற்ற கேணல் சுசந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து அவர் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் வரலாற்று நெடுகிலும் ஒரு அவதானம் இருந்து வருகின்றது. இவ்வாறு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.