werererகிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசிக்கும் காராளசிங்கம் குலேந்திரன் என்னும் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி மாலை ஊற்றுப்புலத்தில் தனது சகோதரியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பின்னர் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாமையினால் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளனர். மறுநாள் காலை குறித்த முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சில நாட்களின் முன்னர் திருவையாறு பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளியான முருகையா தவவேந்தன் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.