ertretrதிருகோணமலை பாலையூற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது நேற்றுமாலை 5.00 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை, காமினி திஸாநாயக்க மாவத்தையைச் சேர்ந்த மரக்கலுகே பிரியதர்ஷன என்பவருடைய முச்சக்கர வண்டிக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.