kilinochchi schoolமுல்லைத்தீவு விஸ்வமடு விஸ்வநாதர் வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள, வளாகத்திலிருந்த குளவிக்கூடு இன்று கலைந்து, கொட்டியதில் 46பேர் பாதிக்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கடுமையான காற்றுக்காரணமாக கலைந்து, விசுவநாதர் ஆரம்வித்தியாலய 30 மாணவர்கள் உட்பட 5 ஆசிரியர்கள் மற்றும் விஸ்வமடு மகா வித்தியாலய 9 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இதில், ஆரம்பப்பிரிவு இரு மாணவர்கள் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த இரு பாடசாலைகளும் அவசரநிலையை கருத்திற் கொண்டு மூடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.