unnamed (1)பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் தலைமையில் நேற்றுபிற்பகல் 2.30க்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் “அறிவொளி” இல்லத்தில் நடைபெற்றது.

சிறப்பு அதிதியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் வவுனியா சமளங்குளம், முருகனூர் ஆகிய பகுதியில் பாடசாலை கல்வியை இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைக்கும் முயற்சிக்காக, எமது கிராம இணைப்பாளர்களின் வேண்டுகோளிற்கிணங்க இவ் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் ஆண்டுக்கான கற்றல் செயற்பாட்டுக்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா விளையாட்டு கழகத்தின் ஆதரவில் கல்வியால் எழுவோம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் பாடசாலை சிறுவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு இங்கிலாந்தில் இருந்து அனுசரணை வழங்கிவரும் விளையாட்டுக்கழக தலைமைக்குழுவினரான கனகரத்தினம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன், செல்வரத்தினம் சுரேஸ், கருணாநிதி இனியன் ஆகியோருக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் இன்றைய நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் திரு வ.பிரதீபன், திரு ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

unnamed (1)unnamed (2) unnamed (3) unnamed