dfdfdயாழ். ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் நேற்று கர்ப்பிணி பெண் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் பெப்ரவரி 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகா (வயது27) என்ற பெண் கொடூரமான முறையில் நேற்று கொல்லப்பட்டார். முச்சக்கரவண்டி ஒன்றில் வந்தவர்கள் பகல் 11.00 மணியளவில் தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர்மீது தாக்குதல் நடாத்தியதாக கூறப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் கூறப்படும் வட்டுக்கோட்டை பழைய நீதிமன்றத்தடி கரம்பகம் என்ற இடத்தைச் சேர்ந்த நாகேந்திரன் துஷியந்திரன் (வயது30) நாகேந்திரன் துஷியந்தன் வயது32) ஆகிய சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் றியால் குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.