காணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியில் 14பேர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணாமற்போன தங்களின் உறவுகள் தொடர்பில் இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more